Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொண்டாட்டியை போட்டுத்தள்ள லீவ் கேட்ட மேனேஜர்!! அதிர்ந்துபோன அதிகாரிகள்

Webdunia
வெள்ளி, 25 ஜனவரி 2019 (10:09 IST)
பீகாரில் மனைவியை கொலை செய்ய 2 நாள் விடுப்பு கொடுங்கள் என வங்கி மேலாளர் கடிதம் எழுதியதால் அதிகாரிகள் அதிர்ந்துபோனர்.
பீகார் மாநிலம் பக்ஸரை சேர்ந்தவர் முன்னா பிரசாத். இவர் வங்கியில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். கிட்னி பிரச்சனை காரணமாக இவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மனைவியை அருகிலிருந்து கவனித்துக் கொள்ள முன்னா அவ்வப்போது விடுப்பு எடுத்து வந்துள்ளார்.
 
அப்படி மனைவியை கவனித்துக் கொள்ள லீவ் வேண்டும் என முன்னா உயரதிகாரிகளிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் லீவ் தர முடியாது என ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டனர்.
 
இதனால் மனமுடைந்த முன்னா, தனது மனைவியை கொலை செய்து, அவருக்கு இறுதி சடங்கு செய்ய 2 நாட்கள் லீவ் தேவை என கடிதம் எழுதி அதனை தனது உயரதிகாரிகளுக்கும், பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் அலுவலகங்களுக்கும் அனுப்பி வைத்துவிட்டார்.
 
இதனைப்பார்த்து அதிர்ந்துபோன அதிகாரிகள் நீங்க எத்தனை நாள் வேண்டுமானாலும் லீவ் எடுத்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டனராம்.
 
இந்நிலையில் தனது செயலுக்கு விளக்கமளித்த முன்னா, எனது மனைவியை கவனித்துக் கொள்ள ஆள் இல்லை. அவளை பார்க்க லீவ் கேட்டால் கொடுக்க மாட்டிங்கிறார்கள். அந்த விரக்தியில் தான் இப்படி கடிதத்தை எழுதினேன் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments