Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொண்டாட்டியை போட்டுத்தள்ள லீவ் கேட்ட மேனேஜர்!! அதிர்ந்துபோன அதிகாரிகள்

Webdunia
வெள்ளி, 25 ஜனவரி 2019 (10:09 IST)
பீகாரில் மனைவியை கொலை செய்ய 2 நாள் விடுப்பு கொடுங்கள் என வங்கி மேலாளர் கடிதம் எழுதியதால் அதிகாரிகள் அதிர்ந்துபோனர்.
பீகார் மாநிலம் பக்ஸரை சேர்ந்தவர் முன்னா பிரசாத். இவர் வங்கியில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். கிட்னி பிரச்சனை காரணமாக இவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மனைவியை அருகிலிருந்து கவனித்துக் கொள்ள முன்னா அவ்வப்போது விடுப்பு எடுத்து வந்துள்ளார்.
 
அப்படி மனைவியை கவனித்துக் கொள்ள லீவ் வேண்டும் என முன்னா உயரதிகாரிகளிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் லீவ் தர முடியாது என ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டனர்.
 
இதனால் மனமுடைந்த முன்னா, தனது மனைவியை கொலை செய்து, அவருக்கு இறுதி சடங்கு செய்ய 2 நாட்கள் லீவ் தேவை என கடிதம் எழுதி அதனை தனது உயரதிகாரிகளுக்கும், பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் அலுவலகங்களுக்கும் அனுப்பி வைத்துவிட்டார்.
 
இதனைப்பார்த்து அதிர்ந்துபோன அதிகாரிகள் நீங்க எத்தனை நாள் வேண்டுமானாலும் லீவ் எடுத்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டனராம்.
 
இந்நிலையில் தனது செயலுக்கு விளக்கமளித்த முன்னா, எனது மனைவியை கவனித்துக் கொள்ள ஆள் இல்லை. அவளை பார்க்க லீவ் கேட்டால் கொடுக்க மாட்டிங்கிறார்கள். அந்த விரக்தியில் தான் இப்படி கடிதத்தை எழுதினேன் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments