Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் 9 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம்; 3 கயவர்கள் கைது

Webdunia
செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (13:22 IST)
கேரளாவில் 9 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 3 அயோக்கியன்களை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பள்ளி மாணவிகள் மீதான பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் போதிலும் இந்த கொடுமை குறைந்த பாடில்லை
 
கேரளா கோட்டயம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் அதே பகுதியிலுள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். மாணவிக்கு அகில் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான் அகில். பின்பு மாணவியை மிரட்டி அவரிடம் நகை மற்றும் பணத்தை பறித்ததோடு இல்லாமல் தன் நண்பர்களுடன் சேர்ந்து மாணவியை சீரழித்துள்ளான்.
 
இதனையடுத்து அந்த நபரின் தொல்லை அதிகரிக்கவே மாணவி இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தார். காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு போலீஸார் அந்த மூன்று காமுகன்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
இந்த மனித மிருகங்களை உடனடியாக தூக்கிலிட வேண்டும் என பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் யாராவது ’யார் அந்த சார்’ என சொன்னால் அது நீதிமன்ற அவமதிப்பு: அரசு வழக்கறிஞர்..!

ஒரு பக்கம் பிச்சை எடுக்கும் பாகிஸ்தான், இன்னொரு பக்கம் தீவிரவாதம் செய்கிறது: இந்திய எம்பிக்கள் குழு

ஞானசேகரனுக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்