Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் 9 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம்; 3 கயவர்கள் கைது

Webdunia
செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (13:22 IST)
கேரளாவில் 9 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 3 அயோக்கியன்களை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பள்ளி மாணவிகள் மீதான பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் போதிலும் இந்த கொடுமை குறைந்த பாடில்லை
 
கேரளா கோட்டயம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் அதே பகுதியிலுள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். மாணவிக்கு அகில் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான் அகில். பின்பு மாணவியை மிரட்டி அவரிடம் நகை மற்றும் பணத்தை பறித்ததோடு இல்லாமல் தன் நண்பர்களுடன் சேர்ந்து மாணவியை சீரழித்துள்ளான்.
 
இதனையடுத்து அந்த நபரின் தொல்லை அதிகரிக்கவே மாணவி இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தார். காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு போலீஸார் அந்த மூன்று காமுகன்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
இந்த மனித மிருகங்களை உடனடியாக தூக்கிலிட வேண்டும் என பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்