Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்துக்காக 90 வயது பாட்டியை அடித்து துன்புறுத்திய பேத்தி கைது

Webdunia
செவ்வாய், 20 மார்ச் 2018 (09:28 IST)
கேரளாவில் 90 வயது பாட்டியை சொத்துக்காக அடித்து துன்புறுத்திய பேத்தியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கல்யாணி(90). இவரது பேத்தி தீபா(40). கல்யாணியும் தீபாவும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். தீபா தனது பாட்டியான கல்யாணியை சொத்துக்காக தினமும் கண்மூடித்தனமாக அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். பேத்தி தீபா தினமும் தன்னை அடிப்பதாகவும், அதனால், உடம்பு முழுக்க காயங்கள் உள்ளதாகவும் கல்யாணி அழுதபடி பக்கத்து வீட்டாரிடம் கூறியுள்ளார்.
 
 
இதனையடுத்து தீபாவின் பக்கத்து வீட்டுக்காரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சொத்துக்களை அபகரிப்பதற்காக பாட்டியை அடித்து துன்புறுத்தியதாக தீபா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு சவரன் ரூ.70,000 நெருங்கியது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் சுமார் ரூ.1500 உயர்வு..!

டி.டி.வி. தினகரன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. அமமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

சென்னை வந்த அமித்ஷா.. இரட்டை இலை வழக்கை தூசுத்தட்டிய தேர்தல் ஆணையம்! - என்ன நடக்குது அதிமுகவில்?

இப்படியா கொச்சையாக பேசுவது? அமைச்சர் பொன்முடிக்கு கனிமொழி எம்பி கண்டனம்..!

அதிமுகவில் இருந்து திடீரென விலகிய அம்மா நாளிதழ் வெளியீட்டாளர்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments