Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உபி கோரக்பூராக மாறிய கர்நாடக கோலார்; 90 பச்சிளம் குழந்தைகள் பலி

Webdunia
சனி, 26 ஆகஸ்ட் 2017 (14:32 IST)
கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் உள்ள ஸ்ரீ நரசிம்ம ராஜா மருத்துவமனையில் கடந்த 8 மாதத்தில் மட்டும் சுமார் 90 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


 

 
அண்மையில் உபி கோரக்பூர் பகுதியில் குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதேபோன்று கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் உள்ள ஸ்ரீ நரசிம்ம ராஜா மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி தற்போது வரை 35 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளது.
 
இதையடுத்து விசாரணையில் கடந்த 8 மாதத்தில் 90 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது:-
 
மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் குறைந்த எடையுடன் பிறந்ததது என்று தெரிவித்துள்ளனர். ஆனால் ஆங்காங்கே பிறந்த குழந்தைகளின் உயிரிழப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
 
இந்நிலையில் இந்தியாவில் பிறந்த குழந்தைகள் மீது சோதனை நடத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வியாபாரம் மையமாக திகழும் மருத்துவ துறை தற்போது லாப நோக்கில் மட்டுமே செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டரை கடத்தி 6 கோடி கேட்ட கடத்தல்காரர்கள்.. கைக்காசு 300 ரூபாய் செலவானது தான் மிச்சம்.!

ZOHO சி.இ.ஓ பதவியிலிருந்து திடீரென விலகிய ஸ்ரீதர் வேம்பு.. என்ன காரணம்?

சர்வதேச ஹைப்பர்லூப் போட்டி: ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில்.. தேதி அறிவிப்பு..!

காசாவுக்குள் நுழைய பாலஸ்தீனியர்களுக்கு அனுமதி! 6 பிணை கைதிகள் விரைவில் விடுவிப்பு!

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments