Webdunia - Bharat's app for daily news and videos

Install App

80 வயது பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு காப்பு

Webdunia
சனி, 27 ஜூன் 2015 (01:47 IST)
80 வயது பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை கேரள காவல்துறையினர் கைது செய்தனர்.
 
திருவனந்தபுரம் அருகே உள்ளது களக்கூட்டம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் நவ்சாத் (29). இவருக்கு முறையாக வேலை எதுவும் இல்லையாம். இதனால், வேலை இல்லாத நேரத்தில் கஞ்சா குடித்து அந்த பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால், இவர் பெரும்பாலன நேரங்களில் கஞ்சா போதையிலேயே இருப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
 
இந்த நிலையில், நவ்சாத் கஞ்சா போதையில் இருந்த போது, அருகில் உள்ள வீட்டிற்குள் திடீரன நுழைந்துள்ளார். அங்கு அவர் முன்பு சுமார் 80 வயது பாட்டி ஒருவர் தனியாக இருந்ததைக் கண்டார். காமம் கண்ணை மறைந்த நிலையில், அந்த 80 பாட்டியை மிகுத்தனமாகக் காமவெறியில், பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால், கடுமையாக பாதிக்கப்பட்ட அந்தப் பாட்டி மயங்கி விழுந்துள்ளார்.
 
சிறிது நேரம் கழித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், அந்தப் பாட்டியை காப்பாற்றி திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.
 
இந்தச் சம்பவம் குறித்து, அந்தப் பாட்டி அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் நவ்சாத் மீது வழக்குப் பதிவு செய்து அவரை வலை வீசி தேடி வந்தனர்.
 
இந்த நிலையில் நெய்யாற்றின்கரை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்த நவ்சாத்தை காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
 

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!