Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

8 பெண்கள் சிறையிலிருந்து தப்பியோட்டம்: போலீஸ் வலைவீச்சு

8 பெண்கள் சிறையிலிருந்து தப்பியோட்டம்: போலீஸ் வலைவீச்சு
, சனி, 23 மார்ச் 2013 (17:38 IST)
மும்பையில் 8 மேற்கு வங்க பெண்கள் சிறையிலிருந்து தப்பி ஓடினர். இந்தியாவில் தங்கியிருக்க உரிய ஆவணங்கள் இல்லாததால் இவர்கள் கைது செய்யப்பட்டவர்கள்.

மும்பை நகரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருப்பவர்களை கைது செய்ய, குடியுரிமை துறை அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில், தானே பகுதியில் தங்கியிருந்த 21 வங்க தேசத்தைச் சேர்ந்தவர்களை வியாழக்கிழமை காவல்துறை கைது செய்தது.

கைது செய்யப்பட்டவர்களை நாதர் காவல் நிலையத்தில் வைது விசாரித்தனர். விசாரணை முடிந்தவுடன், பெண் கைதிகளை அங்கு அடைக்க வசதி இல்லாததால், தானே வின் மிரா சாலை காவல் நிலைய சிறையில் அடைத்தனர்.அடைக்கப்பட்ட 8 பேரும் இன்று அதிகாலையில் ஜன்னல் கம்பிகளை வளைத்து தப்பிச் சென்றனர்.

பணியின் போது கவனக் குறைவாக இருந்த பெண் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்கள். தப்பியவர்களை மும்பை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil