Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெல்லியில் 7 ஆம் வகுப்பு மாணவி பலாத்காரம்: ஓடும் காரில் 6 பேர் கும்பல் வெறிச்செயல்

டெல்லியில் 7 ஆம் வகுப்பு மாணவி பலாத்காரம்: ஓடும் காரில் 6 பேர் கும்பல் வெறிச்செயல்
, வெள்ளி, 11 டிசம்பர் 2015 (17:52 IST)
டெல்லியில் ரன்ஹோலா பகுதியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் ஓடும் காரில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
 
ரன்ஹோல பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 7 ஆம் வகுப்பு மணவி பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும் போது அவரது குடும்ப நண்பர்கள் இருவர் சிறுமியை வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி காரில் அழைத்து சென்று பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
அந்த காரில் மேலும் 4 பேர் இருந்துள்ளனர், அவர்களும் சேர்ந்து 6 பேர் ஓடும் காரில் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்துக்கு பயனபடுத்திய கார் ஒரு கால் சென்டருக்கு சொந்தமானது. குற்றவாளிகளில் ஒருவன் அந்த கால்சென்டரில் பணிபுரிபவன்.
 
சந்தேகத்துக்கு இடமாக திரிந்த அந்த காரை கண்காணித்த காவல் ரோந்து வாகனம், அவர்களை விரட்டி பிடித்த போது இந்த சம்பவம் தெரியவந்தது. காரில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர், ஒருவன் தப்பி ஓடியுள்ளான். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் பெயர் ரமேஷ், நரேந்திரா, சந்தீப், ராகுல் மற்றும் சூரஜ் என தெரியவந்துள்ளது.
 
நாட்டின் தலைநகரான டெல்லியில் அடிக்கடி இதுபோன்ற தலை குணிவான சம்பவங்கள் அரங்கேறுவது வாடிக்கையாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil