Webdunia - Bharat's app for daily news and videos

Install App

70 சதவீத லாரி ஓட்டுனர்களுக்கு கண் பார்வை குறைவு - அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2017 (16:26 IST)
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் லாரி ஓட்டுனர்களில் பெரும்பாலானோருக்கு கண் பார்வை சரியாக இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


 

 
இந்தியாவில் லாரிகளால் பெரும்பாலான சாலை விபத்துகள் ஏற்படுகிறது. பல மனித உயிர்களும் பலியாகின்றன. இந்நிலையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் குருகிராமில் உள்ள கெர்க்கி தௌளா நெடுஞ்சாலை சுங்கக் கட்டண மையத்தில் லாரி ஓட்டுனர்களுக்கான கண் பார்வை சோதனை முகாமை நடத்தியது. 
 
அப்போது 70 சதவீத லாரி ஓட்டுனர்களுக்கு கண் பார்வை குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது. சுமார் 700 ஓட்டுனர்கள் மற்றும் கிளீனர்களுக்கு நடத்திய சோதனையில் 500 பேருக்கு கண்ணாடி வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 50 பேருக்கு 20 அடி முதல் 30 அடி தூரம் வரை கூட தெரியவில்லை என்பது தெரியவந்துள்ளது.
 
எனவே, வருடத்திற்கு ஒருமுறை லாரி ஓட்டுனர்கள் தங்களது கண்பார்வைகளை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தினமும் 400 சாலை விபத்துகள் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments