Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவறவிட்ட 70 செல்போன்கள்..! உரியவர்களிடம் ஒப்படைத்த சைபர் கிரைம்..!!

Senthil Velan
செவ்வாய், 23 ஜனவரி 2024 (17:19 IST)
புதுச்சேரியில் காணாமல் போன 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 70 செல்போன்களை கண்டுபிடித்த சைபர் கிரைம் போலீசார், அதனை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்

புதுச்சேரியில் கடந்த இரண்டு மாதங்களில் 250 வழக்குகள் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பதிவாகி உள்ளது. இதில் தவறவிட்ட செல்போன்களின் வழக்கு தான் அதிகம். இரண்டு மாதங்களில் பெரும்பாலான செல்போன்களை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 
 
சைபர் கிராம் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் இதனை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

ALSO READ: அயோத்தியில் குவிந்த பக்தர்கள்..! கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்.!!
 
இணைய வழியில் வருகின்ற  முதலீடு, வேலைவாய்ப்பு, வரன் தேடுதல், ஒரே நாளில் 10% வருமானம், குறைந்த விலையில் பொருட்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு, பழைய பொருட்களை குறைந்த விலைக்கு தருகிறோம், உங்களுடைய கிரெடிட் கார்டில் கடன் வாங்கும் தொகையை அதிகரிக்கிறோம், செல்போன் டவர் அமைக்க இடம் வேண்டும், இலவசமாக ஆன்லைனில் டிரேடிங் செய்ய சொல்லிக் கொடுக்கிறோம் போன்ற இணைய வழியில் வருகின்ற எதையுமே நம்ப வேண்டாம் என்று பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பின் ஏப்ரலில் பெய்த மழையின் சாதனை.. முழு தகவல்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments