சைக்கிளில் ஏற்றிக் சென்று 7 வயது சிறுமியை கற்பழித்துக் கொன்ற காமக் கொடூரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஒடிசாவில் உள்ள சம்பல்பூரில் 2ஆம் வகுப்பு படிக்கும் ஏழு வயது சிறுமியை பக்கத்து ஊரை சேர்ந்த பிரதீப் என்பவர் தனது சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார்.
இரவு 9 மணி ஆகியும் சிறுமி வீடு திரும்பாததால் பிரதீபின் வீட்டுக்கு சென்று பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது, சிறுமியை அனுப்பிவிட்டதாக கூறியுள்ளான்.
பிரதீப் மீது சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்துறையினர் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் பிரதீப்பிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமியை அழைத்து சென்று கற்பழித்து கொன்று விட்டதாக ஒப்புகொண்டான்.
இதையடுத்து சிறுமியின் உடலை சம்பல்பூரில் உள்ள தன்லாபரா எனும் இடத்தில் அமைந்துள்ள பூங்காவில் காவல்துறையினர் கண்டெடுத்தனர். சிறுமியை கற்பழித்து கொலை செய்து பிரதீப் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.