Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடமாநிலங்களில் பெய்த தொடர் மழையால் 57 பேர் பலி

Webdunia
செவ்வாய், 29 மே 2018 (19:21 IST)
இந்தியாவின் வடமாநிலங்களான உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், பீகார் மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையால் இதுவரை 57 பேர் பலியாகியுள்ளனர்.
 
பீகாரில் நேற்றிரவு இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் அங்கு 19 பேர் பலியாகியுள்ளனர். அதேபோல் உபியில் உள்ள உன்னாவ் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதில் 15 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
 
மேலும், மழையினால் அப்பகுதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இடி, மின்னலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
 
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் இடி, மின்னலுடன் கூடிய மழையால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் வடமாநிலங்களில் பெய்த கனமழையால் இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments