Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5000 கோடி மோசடி- குஜராத் தொழிலதிபர் துபாயிலிருந்து நைஜீரியாவுக்கு தப்பியோட்டம்

Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2018 (19:22 IST)
5000 கோடி ரூபாயை வங்கி மோசடி செய்த தொழிலதிபர் நிதின் சந்தேசரா துபாயிலிருந்து நைஜீரியா நாட்டுக்கு தப்பியோட்டம்



குஜராத்தைச் சேர்ந்த மருந்து கம்பெனி அதிபர் நிதின் சந்தேசரா. இவர் தனது தொழில் சம்பந்தமாக ஆந்திரா வங்கியில் ரூபாய் 5000 கோடி அளவுக்குக் கடன் பெற்றிருந்தார். அந்த கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் தலைமறைவானார். இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதுவு செய்து தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

அவரது மருந்து கம்பெனியின் சொத்துகளை முடக்கிய சி பி ஐ அவரையும் தேடி வந்தது. இதற்கிடையில் அவர் துபாயில் பதுங்கியிருப்பதாகவும் அவரை கைது செய்துள்ள சி பி ஐ அவரை விரைவில் இந்தியா கொண்டுவர உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் தற்போது அவர் துபாயில் இல்லை என்றும் துபாயில் இருந்து ரகசியமாக நைஜீரியாவுக்குத் தப்பி சென்றிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் நைஜீரியா நாட்டோடு நம் நாடு, கைதிகள் ஒப்படைப்பு சம்மந்தமான ஒப்பந்ததிலோ சட்ட ரீதியான ஒப்பந்த உறவுகளிலோ இதுவரை கையெழுத்திட்டதில்லை என்பதால் அவரை இந்தியா அழைத்து வருவதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும் சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments