Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதிய உணவு உட்கொண்ட 50 பள்ளி குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (15:15 IST)
மத்திய பிரதேசத்தில் மதிய உணவு உட்கொண்ட 50 பள்ளி குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் சாட்டர்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு இன்று வழக்கம் போல மதிய உணவு வழங்கப்பட்டது. அதனை மாணவர்கள் உட்கொண்டனர். ஆனால்  சிறிது நேரத்திலேயே மாணவர்கள் அனைவரும் மயங்கி சரிந்தனர். இதனால் பதறிப்போன பள்ளி நிர்வாகம் 50 குழந்தைகளையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தரமில்லா உணவை உட்கொண்டதே மாணவர்களின் மயக்கத்திற்கு காரணம் என்று பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பரிமாறப்பட்ட உணவில் கூழாங்கற்கள் இருந்ததாக மாணவர்கள் கூறினர். மதிய உணவு உட்கொண்டு பள்ளி குழந்தைகள் மயக்கம் அடைந்தது குறித்து விசாரணை நடத்த தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments