Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிநீர் சப்ளை 5 சதவீதம் குறைப்பு - எங்கு தெரியுமா?

Sinoj
வெள்ளி, 15 மார்ச் 2024 (16:18 IST)
சுத்திகரிப்பு நிலையத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் செய்து வருவதால், குடிநீர் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாக  மாநராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
 
மராட்டிய மாநிலம் மும்பை நகர் முழுவதும் ஏப்ரம் மாதம் 24 ஆம் தேதி முதல் குடிநீர் விநியோகம் 5 சதவீதம் குறைக்கப்படுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
மும்பை நகருக்கு குடி நீர் வழங்கக் கூடிய பந்துப் சுத்திகரிப்பு நிலையத்தில் பருவமழைக்கு முந்தைய பராமரிப்பு பணிகள் மேற்ககொள்ளப்பட்டு வருகிறது.
 
எனவே அங்கு குடிநீர் குறைக்கப்பட்டிருப்பதாக பிரஹன் மும்பை மாகராட்சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
மேலும், மும்பையின் புற நகர்ப்பகுதியான பந்துப்பில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், ஆசியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையம் ஆகும்.
 
இங்கிருந்து மும்பை நகரின் பெரும்பாலான இடங்களுக்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது.
இங்கு 1910 மில்லியன் லிட்டர் மற்றும் 900 மில்லியன் லிட்டர் கொள்ளவு கொண்ட 2 சுத்திகரிப்பு  அலகுகள் உள்ளன.
 
இந்த நிலையில், மக்களுக்கு  வழங்கப்படும் குடிநீரின் அளவு 5 சதவீதம் குறைக்கப்பட்டிருப்பதாகக், அங்குள்ள மக்கள்  நீரை சிக்கனமாகப் பயன்படுத்தும்படி  மாநகராட்சி வேண்டுகொள் விடுத்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காணாமல் போன ‘அன்னாபெல்’ பேய் பொம்மை.. அடுத்தடுத்து நடக்கும் துர் சம்பவங்கள்! - பீதியில் உறைந்த மக்கள்!

ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்த ஈபிஎஸ்! முதல்வர் முக ஸ்டாலின்

இடியை கண்டாலும் பயம் இல்லை என்று கூறியவர் வெளிநாடு தப்பிச்சென்றது ஏன்? ஈபிஎஸ் கேள்வி

பாகிஸ்தானை ஓட ஓட விரட்டிய ராக்கெட் லாஞ்சர்கள்.. இந்தியாவிடம் ஆர்டர் கொடுத்த இஸ்ரேல்..!

கனமழை எச்சரிக்கை: சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை! - வனத்துறை உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments