Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிவேக விரைவு ரயில் மோதி 5 பேர் பலி: ஆந்திராவில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (08:17 IST)
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் நேற்று இரவு அதிவேக விரைவு ரயில் மோதியதில் குறைந்தது ஐந்து பேர் பலியாகியுள்ளனர். 

 
செகந்திராபாத் - கௌகாத்தி விரைவு ரயிலில் சில பயணிகள் சங்கிலியை இழுத்து மற்ற தண்டவாளத்தை கடக்க முயன்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. அருகில் உள்ள தண்டவாளத்தில் எதிர்திசையில் வந்து கொண்டிருந்த புவனேஸ்வர் - மும்பை (கொனார்க் எக்ஸ்பிரஸ்) ரயில் மோதி 5 பேர் பலியாகினர். மேலும் 8 பேர் காயம் அடைந்துள்ளனர். 
 
இந்நிலையில் ஸ்ரீகாகுளம் எஸ்பி இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளதாவது, கௌஹாத்தி எக்ஸ்பிரஸில் யாரோ சங்கிலியை இழுத்து ஐந்து பேர் கீழே இறங்கி தண்டவாளத்தை கடந்த போது  எதிரே வந்த கோனார்க் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 
இதனிடையே, பயணிகள் உயிரிழந்ததற்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் நிலைமையை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு முதல்வர் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு மிக உயர்ந்த உதவிகளை வழங்க அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்குமாறு CMO-க்கு உத்தரவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழியா? முட்டையா? எது முதலில் வந்தது? - புதிருக்கு விடை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

யூட்யூபை பார்த்து தன் வயிற்றை தானே கிழித்து ஆபரேஷன் செய்த நபர்! - அதிர்ச்சி சம்பவம்!

நாளை தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்! இன்றே சென்னை வந்த கேரள முதல்வர் பினராயி விஜயன்! - பரபரப்பாகும் அரசியல் களம்!

சோதனை ஓட்டம் வெற்றி! டிசம்பரில் வருகிறது புதிய மெட்ரோ ரயில் சேவை! - சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments