Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி?

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2017 (22:57 IST)
குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்றாலும் மீண்டும் குஜராத்தில் ஆட்சி அமைப்பது பாஜகதான் என்றே தெரிவித்தன

இந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் முடிவடைந்த பின்னர் எடுக்கப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பிலும் மீண்டும் பாஜக ஆட்சியே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐந்து முக்கிய ஊடகங்கள் எடுத்துள்ள தனித்தனியான கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 100க்கும் அதிகமான தொகுதிகள் கிடைக்கும் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு 64 முதல் 75 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் இமாச்சல பிரதேச மாநிலத்திலும் பாஜகவே வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் கருத்துக்கணிப்புகள் பல பொய்த்துபோன வரலாறு இந்தியாவில் உண்டு என்பதால் தேர்தல் முடிவு வெளிவரும் வரை பொறுமை காப்போம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments