Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 தலித் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற ஆதிக்க ஜாதியினர்

Webdunia
திங்கள், 18 மே 2015 (16:52 IST)
உத்தரபிரதேசம் மாநிலத்தில் தலித் பெண்கள் 5 பேரை நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாக அழைத்து சென்று கொடுமை நடந்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


 

 
உத்தரப்பிரதேச மாநிலம் ஷகாஜாகான்பூர் மாவட்டத்தில் உள்ள ஹாரிவா கிராமத்தில், தலித் சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர், வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து  அந்த இளைஞரும் இளம்பெண்ணும் தங்கள் ஊரைவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.
 
இச்சம்பவத்தை அடுத்து பெண்ணின் உறவுக்காரர்கள் தலித் வாலிபரின் உறவுக்கார பெண்கள் 5 பேரை நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாக இழுத்து சென்றுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. இச்சம்பவம் தொடபாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவத்தில் தொடர்பு உடைய 5 பேரை கைது செய்துள்ளனர். 
 
இச்சம்பவத்தை அடுத்து கிராமத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

Show comments