Webdunia - Bharat's app for daily news and videos

Install App

41 சீட் தேவை! சொன்னபடி 48 மணி நேரத்தில் பிரதமரை அறிவிப்போம்?! – பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் ஸ்கெட்ச்!

Prasanth Karthick
செவ்வாய், 4 ஜூன் 2024 (18:46 IST)
மக்களவை தேர்தலில் கிட்டத்தட்ட பெரும்பான்மையை நெருங்கியுள்ள காங்கிரஸின் இந்தியா கூட்டணி ஆட்சியமைக்க காய் நகர்த்தும் வேலையை தொடங்கியுள்ளது.



இந்தியா முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி 294 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 231 இடங்களில், பிற கட்சிகள், சுயேட்சைகள் 18 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர்.

தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைய 272 சீட்கள் தேவைப்படும் நிலையில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. அதேசமயம் காங்கிரஸ் தற்போதுள்ள 231 தொகுதிகளில் வென்றால் மேற்கொண்டு 41 சீட்கள் கிடைத்தால் ஆட்சியமைக்க முடியும் என்பதால் தெலுங்கு தேசம் கட்சி, சுயேட்சைகள் உள்ளிட்டோருடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராகுல்காந்தி, நாளை இந்தியா கூட்டணியின் கட்சிகளோடு சேர்ந்து ஆலோசனை செய்துவிட்டு பெரும்பான்மை பெறுவதற்கு தெலுக்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளிடம் பேசுவது குறித்து முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளார்.

ALSO READ: ரெய்பரேலியா? வயநாடா? அதை சொன்னா மோடி உஷாராயிடுவார்! – ராகுல் காந்தியின் சீக்ரெட் திட்டம்!

தேர்தலுக்கு முன்னதாக ‘காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் யார்?” என கேட்டபோது இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை 48 மணி நேரத்திற்குள் எங்களால் தேர்வு செய்துவிட முடியும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியிருந்தார். தற்போது இந்தியா கூட்டணிக்கு தேவையான 41 சீட்களும் கிடைத்துவிடும் நிலையில் கூட்டணி தொங்கு ஆட்சி அமைந்தால் பிரதமராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பெரும்பாலும் காங்கிரஸை சேர்ந்தவர்களாலும், மற்ற காங் ஆதரவு கட்சிகளாலும் ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளாராக முன்னிறுத்தப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டமன்றத்தில் அமளி; அதிமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்! – சபாநாயகர் விளக்கம்!

300 கோடி மோசடி செய்த வழக்கு-கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3.20 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்த குற்றப்பிரிவு போலீசார்!

ஈஷாவில் களைக்கட்டிய உலக யோகா தின விழா! நூற்றுக்கணக்கான CRPF வீரர்கள் பங்கேற்பு!

இன்றும் நாளையும் கிரிவலம் நாள்.. தமிழக அரசு செய்த சிறப்பு ஏற்பாடுகள்..!

தமிழ்நாட்டில் 3 நாட்கள் அதி கனமழை பெய்யும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments