Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒடிசாவில் 400 மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் சரண்

ஒடிசாவில் 400 மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் சரண்
, சனி, 19 செப்டம்பர் 2015 (08:12 IST)
ஒடிசாவில்  மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருந்த 400 பேர் சரணடைந்துள்ளனர்.
 
மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருந்தவர் சரணடைந்தது குறித்து மால்கன்கிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூறுகையில், "மாட்டெரு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட 6 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 400 மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள்  காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர். அவர்களில் 45 பேர் இடதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள்".


 
 
"சரணடைந்த கிராம மக்கள் அமைதியான வாழ்க்கையை வாழ உதவிகள் செய்யப்படும். சரணடைந்தவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சட்டப்படி நீக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்".
 
"கடந்த 12 நாட்களில் சுமார்  1000 மாவோயிஸ்ட்டுகள் தங்களது ஆயுதங்களை கீழே போட்டு சரணடைந்துள்ளனர். எங்கள் கிராமத்திற்குள் மாவோயிஸ்ட்டுகள் நுழைய ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்".  என்று தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil