Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் மூன்று சிறுமிகளை கற்பழித்த ஆசாமி

வீரமணி பன்னீர்செல்வம்
ஞாயிறு, 20 ஏப்ரல் 2014 (16:16 IST)
ஆந்திராவில் உள்ள சொப்பனான்டி என்ற இடத்தில் செங்கல் சூளையில் வேலை செய்து வந்த மூன்று சிறுமிகளை அந்த சூளையின் உரிமையாளரான 40 வயது ஆசாமி கற்பழித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
லிங்கம்பள்ளி கிஷன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் ஒடிசாவை சேர்ந்த தொழிலாளர்களை வேலை செய்து வருகின்றனர். அக்குடும்பத்தை சேர்ந்த 13 வயது முதல் 15 வயதேயான சிறுமிகள் மூவரை அக்கொடூர ஆசாமி கற்பழித்துள்ளான்.
 
இது அச்சிறுமிகளின் பெற்றோர்களுக்கு தெரிந்திருந்தும் அவர்களை வெளியே கூறாக்கூடாதென அச்சுறுத்தியதால் அமைதியாகிவிட்டனர். தொடர்ந்து அந்த ஆசாமி சிறுமிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதால், ஒரு கட்டத்தில் அரசு சாரா நிறுவனத்தை சார்ந்தவர்களிடம் முறையிட்டுள்ளனர்.
 
அந்நிறுவனத்தினர் இதை உதவி காவல்துறை கண்காணிப்பாளரான வேணுகோபால் ராவின் கவனத்திற்கு கொண்டுசென்றனர். உடனடியாக காவல்துறையினர் அந்த செங்கல் சூளைக்கு விரைந்து பாதிக்கப்பட்ட சிறுமிகளை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். காவல்துறையினர் தன்னை தேடி வருவதை மோப்பம் பிடித்த அந்த ஆசாமி அங்கிருந்து ஓடிவிட்டான். காவல்துறையினர் அவனை தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர்.

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்