Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்: மீட்பு பணிகள் தீவிரம்

Webdunia
சனி, 24 ஆகஸ்ட் 2019 (09:30 IST)
மஹாராஷ்டிராவில் இன்று அதிகாலை 4 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே பிவண்டி என்னும் பகுதியில் ஒரு 4 மாடி குடியிருப்பு கட்டிடம் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் இருந்தது. இது பற்றி தகவலறிந்த அதிகாரிகள், பொதுமக்களை வெளியேறும்படி கூறினர்.

அதன்படி, அங்கு வசித்தவர்களில் பலர் தங்களது உடமைகளை எடுத்துகொண்டு வெளியேறினர். இந்நிலையில் இன்று அதிகாலையில் சிலர் தங்கள் பொருட்களை எடுப்பதற்காக உள்ளே சென்றனர், அப்போது திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் உள்ளே சென்றவர்கள் அனைவரும் சிக்கி கொண்டனர்.

இதன் பிறகு மீட்பு குழுவினர், கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 2 பேரின் உடல்களை மீடனர். 4 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் 10-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதால் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய - சீன உறவில் ஒரு புதிய அத்தியாயம்: பிரதமர் மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு

காவல்துறைக்கு, பொறுப்பு டிஜிபி நியமனம் என்பது அதிகார துஷ்பிரயோகம்: அண்ணாமலை கண்டனம்..

25,000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளர்: தவெக தலைவர் விஜய் உத்தரவு

விஜய் தலைமையில் ஒரு அணி அமையும்: டிடிவி தினகரன் கணிப்பு..!

சென்னையில் நாளை முதல் டீ,காபி விலை உயர்வு. டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments