ஆந்திர ஆளுநர் மாளிகையில் 4 பேருக்கு கொரோனா: ஆளுனருக்கும் பரிசோதனையா?

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (07:45 IST)
ஆந்திர ஆளுநர் மாளிகையில் 4 பேருக்கு கொரோனா
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் இதுவரை 27,890 பேர்களுக்கு கொரொனா பாதிப்பும் 881 பேர் கொரோனாவால் உயிரிழந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஆந்திர மாநில ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் 4 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததை அடுத்து அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையின் முடிவில் தற்போது சம்பந்தப்பட்ட 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவிய நான்கு பேர்களில் ஒருவர் ஆளுநரின் முதன்மை பாதுகாப்பு அதிகாரி என்பது அதிர்ச்சிக்குரிய தகவலாகும்
 
இதனையடுத்து ஆந்திர ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்திரன் என்பவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த உறுதி செய்யப்பட்ட தகவல் இன்னும் வெளிவரவில்லை. ஆந்திர மாநில ஆளுநர் மாளிகையில் அதுவும் ஆளுநரின் முதன்மை பாதுகாப்பு அதிகாரிக்கே கொரோனா தொற்று பரவியுள்ளது ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 18 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments