கேரளாவில் கடும் வெயில்.. மயங்கி விழுந்து 4 பேர் பலியானதால் அதிர்ச்சி..!

Mahendran
வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (18:16 IST)
கேரளாவில் இன்று மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் கடும் வெயில் காரணமாக வாக்களிக்க வந்த நான்கு பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
ஏற்கனவே கடந்த 19ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடந்த போது வாக்களிக்க வந்த இரண்டு முதியவர்கள் பலியானதாக செய்தி வெளியானது என்ற நிலையில் இன்று கேரளாவில் தேர்தல் நடந்த போது நான்கு பேர் பலியாகி இருப்பது தேர்தல் ஆணையத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கேரளாவில் வாக்களிக்க வந்த 68 வயது சந்திரன்ம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த 66 வயது அகமது, ஆலப்புழா தொகுதியின் 70 வயது சோம ராஜன் மற்றும் திரூரைச் சேர்ந்த 63 வயது சித்திக் ஆகியோர் வாக்களித்துவிட்டு வீடு திரும்பியபோதும்,  வாக்களிக்க வரிசையில் நின்ற போதும் உயிரிழந்ததாக தெரிகிறது. 
 
மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வந்த நான்கு பேர் வெயில் காரணமாக உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இனிவரும் தேர்தலிலாவது முதியவர்கள் காலையில் அல்லது நான்கு மணிக்கு மேல் வாக்களிக்க வருமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னைக்கு மட்டும் மெட்ரோ போதும்: கார்த்தி சிதம்பரம் கருத்தால் பரபரப்பு..!

தீவிரவாதிகளின் திடீர் தாக்குதல்: பாகிஸ்தானின் மூன்று FC கமாண்டோக்கள்..!

இந்திய பாஸ்போர்ட் செல்லாது.. சீன பாஸ்போர்ட் வேண்டும்.. அருணாச்சல பிரதேச பெண்ணிடம் அடாவடி செய்த சீன அதிகாரிகள்..!

அயோத்தி ராமர் கோவிலில் கொடியேற்ற விழா.. 161 அடி கொடியை ஏற்றுகிறார் பிரதமர் மோடி..!

வங்கக்கடலில் இன்னொரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு.. நாளை உருவாக வாய்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments