Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விளையாட சென்ற 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சைக்கிள் கடைக்காரர்

விளையாட சென்ற 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சைக்கிள் கடைக்காரர்
, வியாழன், 12 மே 2016 (17:31 IST)
பெங்களூர், சாம்ராஜ்பேட்டையில் 12 வயது சிறுமி ஒருவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் 37 வயதான மஞ்சுநாத் என்பவரால் பலாத்காரம் செய்யப்பட்ட சமபவம் நடைபெற்றுள்ளது.


 
 
சைக்கிள் கடை நடத்தி வரும் மஞ்சுநாத் வீட்டில் அவரது பக்கத்து வீட்டில் உள்ள 12 வயது சிறுமி அடிக்கடி விளையாட செல்வது வழக்கம். வழக்கம் போல விளையாட சென்ற சிறுமியை மஞ்சுநாத் அவரது வீட்டில் வைத்து பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளார்.
 
மஞ்சுநாத் வீட்டில் விளையாட சென்ற சிறுமி நீண்ட நேரத்திற்கு பின் மிகவும் சோர்வாக வந்ததை கண்ட சிறுமியின் தாய்க்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சிறுமியிடம் கேட்டபொழுது அவர் நடந்ததை தனது தயிடம் கூறியுள்ளார்.
 
தனது மகள் பலாத்காரம் செய்யப்பட்டதை கேட்ட சிறுமியின் தாய் காவல் துறையிடம் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மஞ்சுநாத்தை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவலரை கட்டிவைத்து அடித்த அமைச்சரின் சகோதரர்?