Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

35 வயது பெண்ணை பலாத்காரம் செய்த 5 பேர்: தேசிய நெடுஞ்சாலை ஓரம் வெறியாட்டம்

35 வயது பெண்ணை பலாத்காரம் செய்த 5 பேர்: தேசிய நெடுஞ்சாலை ஓரம் வெறியாட்டம்
, ஞாயிறு, 24 ஏப்ரல் 2016 (17:18 IST)
வெளிக்கிழமை இரவு நொய்டாவின் விஜய் நகர் அருகே தேசிய நெடுஞ்சாலை அருகே ஒரு தனிமையான இடத்தில் 5 பேர் கொண்ட கும்பல் 35 வயது பெண் ஒருவரை பலாத்காரம் செய்துள்ளனர்.


 
 
பாதிக்கப்பட்ட அந்த பெண்ணும் அவரது சகோதரனும் ஆடைத் தொழிற்சாலையில் வேலையை முடித்துவிட்டு வெள்ளிக்கிழமை இரவு 8:30 மணியளவில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர்.
 
பைக்கில் சென்று கொண்டிருந்த அவர்களை சுமார் 9:30 மணியளவில் 5 பேர் கொண்ட கும்பல் நிறுத்தி அவரது சகோதரனை அடித்துப் போட்டு விட்டு 35 வயது பெண்ணை தனிமையான இடத்திற்கு கொண்டு சென்று அவர்கள் பலாத்காரம் செய்துள்ளனர்.
 
கத்தியை காட்டி மிரட்டி சத்தமிடக்கூடாது என மிரட்டி என்னை பலாத்காரம் செய்த அவர்களை இதற்கு முன்னர் நான் பார்த்தது இல்லை என அந்த பெண் காவல் துறையில் அளித்த புகாரில் கூறியுள்ளார்.
 
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த விஜய் நகர் காவல் நிலைய காவலர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil