Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி உண்டியலில் கொட்டிக் கிடக்கும் 35,000 கிலோ வெளிநாட்டு நாணயங்கள்

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2016 (16:28 IST)
திருப்பதி கோயில் உண்டியலில் கிடைக்கும் வெளிநாட்டு நாணயங்களை இந்திய ரூபாயாக மாற்ற நடவடிக்கைகளை தேவஸ்தானம் எடுத்து வருகிறது.
 

 
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள், கோவில் உண்டியலில் நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள், நகைகள் போன்றவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். அதேபோல், வெளிநாட்டில் இருந்து வருகை தரும் பக்தர்களும் தங்கள் நாட்டைச் சேர்ந்த நாணயங்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
 
இதனால், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 35 ஆயிரம் கிலோ நாணயங்கள் திருப்பதி உண்டியலில் தற்போது சேர்ந்துள்ளன.
 
இவற்றை, ரிசர்வ் வங்கியின் ஆலோசனை பேரில், இந்திய ரூபாயாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

அடுத்த கட்டுரையில்
Show comments