ஜூலை முதல் தேதி முதல் நாடு முழுவது ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி-யால் இன்று நள்ளிரவு முதல் சிக்ரெட் மீதான வரி 33% உயர்த்தப்படுகிறது.
இன்று நடந்த ஜிஎஸ்டி கூட்டத்திற்கு பிறகு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இந்த அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறியதாவது, சிகரெட் மீதான ஜிஎஸ்டி 28%, அதன் விளம்பரத்திற்கு கூடுதலாக 5% வரியும் விதிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
எனவே, சிகரெட் மீதான வரி மொத்தம் 33% உயர்ந்துள்ளது. இந்த வரி இன்று ( ஜூலை 17 ) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
இந்த கூடுதல் வரி மூலம் மத்திய அரசுக்கு ரூ.5000 கோடி வருமானம் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.