Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

33% வரி உயர்வு: நள்ளிரவு முதல் எகிறும் சிக்ரெட் விலை!!

33% வரி உயர்வு: நள்ளிரவு முதல் எகிறும் சிக்ரெட் விலை!!
, திங்கள், 17 ஜூலை 2017 (21:25 IST)
ஜூலை முதல் தேதி முதல் நாடு முழுவது ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி-யால் இன்று நள்ளிரவு முதல் சிக்ரெட் மீதான வரி 33% உயர்த்தப்படுகிறது.


 
 
இன்று நடந்த ஜிஎஸ்டி கூட்டத்திற்கு பிறகு மத்திய நிதி அமைச்சர்  அருண் ஜெட்லி இந்த அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறியதாவது, சிகரெட் மீதான ஜிஎஸ்டி 28%, அதன் விளம்பரத்திற்கு கூடுதலாக 5% வரியும் விதிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
 
எனவே, சிகரெட் மீதான வரி மொத்தம் 33% உயர்ந்துள்ளது. இந்த வரி இன்று ( ஜூலை 17 ) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. 
 
இந்த கூடுதல் வரி மூலம் மத்திய அரசுக்கு ரூ.5000 கோடி வருமானம் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரவக்குறிச்சி தொகுதியை வஞ்சிக்கும் அரசு - வீடியோ