Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வார வாரம் 32 பெண்கள் மாயம்: என்ன நடக்குது யோகி ஆட்சியில்?

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (15:27 IST)
உத்திர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி அமைத்து வருகிறது. இந்த மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல நடந்து வருகிறது. ஆனால், அரசோ இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதாய் தெரியவில்லை. 
இந்நிலையில், தகவல் உரிமை சட்டத்தின் படி பதில் அளித்துள்ள மாநில குற்ற பதிவு ஆணையம் ஒவ்வொரு வாரமும் 32 பெண்கள் காணாமல் போகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 
 
கடந்த 2017 ஆம் ஆண்டில் மட்டும் 75 மாவட்டங்களில் இளம்பெண்கள் காணாமல் போனதாக 1,675 வழக்குகள் பதிவாகியுள்ளனவாம். 2018 ஆம் ஆண்டில் கடந்த 3 மாதங்களில் 435 பெண்கள் காணாமல் போயுள்ளதாக பதிவாகியுள்ளது.  
 
ஆனால், எஃப்.ஐ.ஆர் பதிவைவிட காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால், முறையாக எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என காவல் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதில் பல பெண்கள் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments