Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

31 ரயில்களின் வேகம் அதிகரிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

31 ரயில்களின் வேகம் அதிகரிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
, வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (15:52 IST)
செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் 31 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

தெற்கு ரயில்வே 31 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் சில ரயில்களின் நேரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்குச் செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 8.50 மணிக்குப் புறப்படுவதற்குப் பதில் 8.55 மணிக்குப் புறப்படும்.

இதேபோல் சென்ட்ரலில் இரவு 8.25–க்கு புறப்படும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் (12601) இனி இரவு 8.15 மணிக்கு புறப்படும். மேலும் சென்ட்ரலில் இரவு 9 மணிகு பழனிக்குப் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் இனி இரவு 9.30 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

மேலும் திருச்சியில் இருந்து (எண் 16854) எழும்பூருக்கு மாலை 5.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இனி 6 மணிக்கு புறப்படும். இதேபோல் சென்ட்ரலில் இருந்து மைசூருக்கு இரவு 9.30 மணிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இனி இரவு 9 மணிக்கு புறப்படும்.

Share this Story:

Follow Webdunia tamil