Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராக்டர் பேரணியை குலைக்க திட்டம்: அவதூறு பரப்ப காத்திருக்கும் பாக்.!

Webdunia
திங்கள், 25 ஜனவரி 2021 (08:16 IST)
டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் டிராக்டர் பேரணியை சீர்குலைக்கும் வகையில் பாக். அவதூறு பரப்ப திட்டம் என தகவல். 

 
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் ஹரியானா உள்பட வட மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டு உள்ளது. 
 
இந்நிலையில் நாளை குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் நேரத்தில் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த டிராக்டர் பேரணியில் நாளை 250 கிலோ மீட்டர் தூரத்திற்கு டிராக்டரில் அணிவகுக்க விவசாயிகள் திட்டமிட்டிருப்பதாகவும் இதற்காக பல்வேறு மாநிலங்களிலிருந்து டிராக்டர்கள் தலைநகரை நோக்கி படை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 
 
இதனிடையே டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் டிராக்டர் பேரணியை சீர்குலைக்கும் வகையில் வதந்திகள் பரப்ப பாகிஸ்தானில்  சுமார் 300 ட்விட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இவற்றை தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments