Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீ பிடித்ததாக வதந்தி.. ஓடும் ரயிலில் இருந்து உயிரை காக்க குதித்த 3 பேர் பரிதாப பலி..!

Mahendran
சனி, 15 ஜூன் 2024 (14:23 IST)
ரயிலில் தீ பிடித்ததாக வதந்தி பரவிய நிலையில் உயிரை காப்பாற்றுவதற்காக ஓடும் ரயிலில் இருந்து குதித்தவர்களில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து பீகார் மாநிலத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த ரயிலில் தீ பற்றியதாக ஓட்டுநருக்கு செல்போனில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
 
இதனை நம்பி ரயிலை நிறுத்த ரயில் ஓட்டுனர் முயன்ற நிலையில் இந்த தகவல் வேகமாக ரயில் பயணிகளிடம் பதவி நிலையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது, அப்போது ரயில் நிற்பதற்கு முன்பே சிலர் கீழே குதித்து தப்பிக்க முயன்றனர். அவ்வாறு கீழே குதித்தவர்களின் மூன்று பயணிகள் பலியானதாகவும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
 உண்மையில் ரயிலில் தீ பற்றவில்லை என்ற நிலையில் ஓட்டுனருக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அநேகமாக இது நக்சல் அமைப்பின் செயலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதிகள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கஞ்சா கடத்தல், பதுக்கலில் இறங்கிய பெண்கள் ஒரே நாளில் 24 கிலோ கஞ்சா பறிமுதல்!

இளம்பெண்ணை திருமண ஆசை கூறி இராணுவ வீரர் பாலியல் பலாத்காரம்- குற்றத்தை ஒப்புக் கொண்டு சிறை சென்ற இராணுவ வீரர்!

13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.! பாஜக நிர்வாகி கைது..! கட்சியில் இருந்து நீக்கம்..!!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு.! பிரதமர் மோடிக்கு முதல்வர் திடீர் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments