Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடப்பு கல்வியாண்டில் 3, 4, 5 ஆம் வகுப்புகளுக்கு புதிய கல்விக் கொள்கை: மத்திய அரசு சுற்றறிக்கை..!

Mahendran
வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (10:57 IST)
நடப்பு கல்வியாண்டில் 3, 4, 5 ஆம் வகுப்புகளுக்கும் புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
 
மத்திய அரசு சமீபத்தில் புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்த நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த கல்விக் கொள்கையின் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அது மட்டுமின்றி வட மாநிலங்களில் இந்த புதிய கல்விக் கொள்கையை முறைக்கு பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தமிழ்நாடு கேரளா உள்பட ஒரு சில மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் புதிய கல்விக் கொள்கையை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என்றும் கூறி வருகின்றன. 
 
இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் சற்றுமுன் அனுப்பிய சுற்றறிக்கையில் நடப்பு கல்வி ஆண்டில் 3 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதை அமல்படுத்த வேண்டும் என்றும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது 
 
தமிழ்நாட்டில் ஏற்கனவே புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் 3 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதிய கல்வித் திட்டம் அமல்படுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் அம்பானி மோசடியாளரா? CBIயிடம் பகீர் புகாரளித்த SBI வங்கி!

முன்னாள் ஐசிஐசிஐ வங்கி சிஇஓ சந்தா கோச்சார் குற்றவாளி தான்; தீர்ப்பாயம் அதிரடி அறிவிப்பு..!

கைது செய்யாம இருக்க பணம் குடுங்க! ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் ரூ.50 லட்சம் வாங்கிய போலீஸ்!? - பகீர் குற்றச்சாட்டு!

சென்னையில் அதிகரிக்கும் டெங்கு: புள்ளிவிவரங்கள் எச்சரிக்கை!

முதல்வர் உடல்நலக்குறைவுக்கு என்ன காரணம்? துணை முதல்வர் உதயநிதி விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments