Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவனின் அந்தரங்க உறுப்பில் சூடு வைக்க முயன்ற வாலிபர்கள் கைது

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2016 (13:03 IST)
டெல்லியில் 12 வயது சிறுவன் ஒருவனை மூன்று வாலிபர்கள் தாக்கி, அவனது அந்தரங்க உறுப்பில் சூடு வைக்க முயன்றுள்ளனர். அவர்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


 
 
அந்த சிறுவன் தனது வீட்டின் அருகில் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த போது அந்த பட்டம் வேறொரு வீட்டின் மேற்கூரையில் விழுந்துவிட்டது. இதனால் அந்த பட்டத்தை எடுக்க அந்த வீட்டிற்கு அந்த சிறுவன் சென்றுள்ளான்.
 
அப்போது அங்கிருந்த மூன்று வாலிபர்கள் அந்த சிறுவனை இரும்பு கம்பியால் தாக்கி, கத்தியை நெருப்பில் வைத்து சிறுவனின் கையில் சூடு வைத்துள்ளனர். மேலும் சிறுவனின் அந்தரங்க உறுப்பிலும் சூடு வைக்க  முயன்றுள்ளனர்.
 
பல மணி நேர துன்புறுத்தலுக்கு பின்னர் அந்த சிறுவனை இங்கு நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என கூறி மிரட்டி அனுப்பியுள்ளனர். தங்கள் மகன் தாக்கப்பட்டதை அறிந்த சிறுவனின் பெற்றோர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர். பின்னர் அந்த மூவரும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

இன்று வெளியாகும் Xiaomi Poco F6 மொபைல் என்னென்ன அம்சங்களில் வருது?.

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது- எல்.முருகன் குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments