Webdunia - Bharat's app for daily news and videos

Install App

32 லட்சம் ஏ.டி.எம் கார்ட்களின் தகவல் திருட்டு: விசாரணையை துவக்கியது எஸ்பிஐ

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2016 (21:21 IST)
எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய 32 லட்சம் டெபிட் கார்டுகளில் உள்ள தகவல்களை திருடியது தொடர்பாக தனது விசாரணையை தொடங்கி உள்ளது.
 

 
நாட்டின் மிகப்பெரிய தேசிய வங்கி எஸ்பிஐ [State Bank of India]. இதன் ஏடிஎம் மையங்களை தனியார் நிறுவனங்கள் நிர்வாகித்து வருகின்றனர். இவர்களில் சிலர் ரகசிய மென்பொருள் மூலமாக வங்கியின் பயனாளர் தொடர்பான ஏடிஎம் விவரங்களை திருடியுள்ளனர்.
 
இந்த தகவலை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தனது வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருந்த 6 லட்சம் டெபிட் கார்டுகளை தடை செய்துள்ளதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
 
டெபிட் கார்டு தடை செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் உடனடியாக, அருகாமையில் உள்ள எஸ்பிஐ அலுவலகம் அல்லது இலவச டோல் ஃப்ரீ அழைப்பு எண்ணை தொடர்பு கொண்டு, தங்களுக்கான புதிய டெபிட் கார்டை விண்ணப்பித்து, பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தது.
 
ஏ.டி.எம் நெட்வெர்க்கிற்குள் இருந்த ஒரு தீய மென்பொருளே இதற்கு காரணம் என்று அவர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், டெபிட் கார்ட் தகவல்கள் எவ்வாறு திருடப்பட்டன என்பது குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments