Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வகுப்பறையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட 2ஆம் ஆண்டு கல்லூரி மாணவன்

Webdunia
செவ்வாய், 2 டிசம்பர் 2014 (17:10 IST)
ஐதாராபாத்தில் 2ஆம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவரை மூத்த மாணவர் வகுப்பறையில் அடித்து கொலை செய்துள்ளார்.
 
ஐதராபாத்தில் உள்ள கல்லூரியில் ஹர்ஷவர்தன் ராவ் என்ற மாணவர், வணிகவியல் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். மதிய உணவு இடைவேளையின் போது வகுப்பறையில் ஹர்ஷவர்தன் ராவ் உடன் படிக்கும் சக மாணவியை மூத்த மாணவர்கள் சிலர் கிண்டல் செய்துள்ளனர். அதனை ஹர்ஷவர்தன் தட்டிக் கேட்டுள்ளார்.
 
இதனால் கோபம் அடைந்த மூத்த மாணவர் ஒருவர், வகுப்பறைக்கு சென்று ஹர்சவர்தனை கடுமையாகத் தாக்கியுள்ளார். பலத்த அடிபட்ட நிலையில் ஹர்ஷவர்தன் மயங்கி விழுந்துள்ளார். உடனே மற்ற மாணவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
 
இந்த சம்பவம் தொடர்பாக மூத்த மாணவர் சதீஷ் என்பவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்காதலை கணவர் ஏற்கவில்லை.. மனவிரக்தியில் கள்ளக்காதலனுடன் இளம்பெண் தற்கொலை..!

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் பதினான்கு பேர், தங்கம் மற்றும் வெள்ளி,பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

சிறிய அளவு ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கருட சேவை: தவறி கீழே விழுந்த குடையால் பரபரப்பு..!

நான் மனிதன் அல்ல! பரமாத்மாவால் பூமிக்கு அனுப்பப்பட்டேன்! – பிரதமர் மோடி!

Show comments