Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ஜி வழக்கால் தொல்லை: உச்சநீதிமன்றத்தில் தஞ்சம் அடைந்த விசாரணை அதிகாரி!!

Webdunia
புதன், 1 நவம்பர் 2017 (17:08 IST)
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரித்து வந்த விசாரணை அதிகாரி இந்த வழக்கால் பணியில் தொல்லை ஏற்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.


 
 
மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சியின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் ரூ.1,76,000 கோடி அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது என கணக்கு தனிக்கை குழு குற்றம்சாட்டியது. 
 
இதில் முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.  இந்த வழக்கின் மீதான் தீர்ப்பு நவம்பர் 7 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. 
 
இந்த வழக்கில் சிபிஐ சார்பில் விவேக் பிரியதர்ஷி, அமலாக்கத்துறை சார்பில் ராஜேஸ்வர் சிங் ஆகியோர் விசாரணை அதிகாரிகளாக செயல்பட்டனர். 
 
இந்நிலையில், ராஜேஸ்வர் சிங் தனக்கு 2ஜி வழக்கால் பணியில் தொல்லைகள் தரப்படுவதாகவும், தேவையற்ற வழக்குகளால் பணி உயர்வு பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments