Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓடும் காரில் இளம்பெண் கற்பழிப்பு - பாதுகாக்க தவறிய போலீசார்

ஓடும் காரில் இளம்பெண் கற்பழிப்பு - பாதுகாக்க தவறிய போலீசார்
, புதன், 9 ஜூலை 2014 (13:11 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் ஓடும் காரில் நான்கு பேரால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
காசியாபாத் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் வசுந்தரா செக்டார் பகுதியில் இருந்து 4 பேர் கொண்ட கும்பலால் கடத்தி செல்லப்பட்டார். கடத்தப்பட்ட அவரை அக்கும்பல் ஓடும் காரில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி நொய்டாவில் தூக்கி வீசி சென்றுள்ளது.
 
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிற்கும் அக்கும்பலில் இருந்த சுனில் டோமர், அகில் டோமருக்கும் முன் விரோதம் இருந்ததும், இவர்கள் மீது அப்பெண் ஏப்ரல், மே மாதங்களில் சாஹிபாபாத், கல்யான்பூர் காவல் நிலையங்களில் புகார் அளித்திருந்ததும் விசாரணையில் தெரியவதுள்ளது. 
 
பொதுமக்களால் மீட்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வரும் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil