Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெல்லியில் ஒரே பெண்ணை 7 பேர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்

டெல்லியில் ஒரே பெண்ணை 7 பேர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்
, ஞாயிறு, 21 ஜூன் 2015 (04:00 IST)
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள குர்கானில் 22 வயது இளம் பெண் ஒருவரை 7 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை அரங்கேறியுள்ளது.
\

 
மேற்குவங்கத்தைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் மோனிஷா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) குர்கானில் வசித்து வந்தார். இவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த கபில் என்ற நண்பருடன் பழகி வந்துள்ளார்.
 
இந்நிலையில், சம்பவ நாள் அன்று, தனது நண்பர் கபிலை காண, அந்தப் பெண் குர்கானில் உள்ள கடை வீதிக்குச் சென்றுள்ளார். அங்கு அவரைச் சந்தித்துப் பேசியுள்ளார். பின்பு, கபிலுடன் கெஸ்ட் அவுஸ் சென்றாகக் கூறப்படுகிறது.
 
அப்போது, அங்கு மறைந்திருந்த கபிலின் நண்பர்கள் 6 பேர் அந்தப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களுடன் கபிலும் இணைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
அவர்களிடமிருந்து மீண்டு வந்த அப்பெண், இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும், அந்தப் பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.
 
தலைநகர் டெல்லியல் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்ற வண்ணம் உள்ளது. இதை உடனே தடுத்து நிறுத்த, மத்திய, மாநில அரசுகள் இணைந்து அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil