Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோதாவரி ஆற்றில் வேன் கவிழ்ந்து 21 பேர் பலி

Webdunia
சனி, 13 ஜூன் 2015 (11:37 IST)
கோதாவரி ஆற்றில் வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 21 பேர் பரிதாபமாக பலியாகினர்.
ஆந்திராவின் விசாகபட்டினத்தை சேர்ந்த ஒரு குடும்பம் திருப்பதிக்கு சாமி தரிசனம் மேற்கொண்டனது. இவர்கள் அனைவரும் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு வேனில் வீடு திரும்பிகொண்டிருந்தனர். வேன் ராஜமுந்திரி அருகே பயணித்து கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராவிதமாக வேன் கோதாவரி ஆற்றில் கவிழ்ந்தது. 
 
இதில் வேனில் பயணித்த அனைவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பலியானோரில் 8 பெண்கள் மற்றும் 7 குழந்தைகளும் அடங்கும். இதில் அதிர்ஷ்டவசமாக ஒரு சிறுவன் மட்டும் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நடந்து முடிந்த இந்த கோர சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

Show comments