Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2020இல் நிலவிற்கு மனிதன் - அண்ணாதுரை

Webdunia
திங்கள், 12 ஜனவரி 2009 (17:29 IST)
சந்திரனுக்கு ஆளில்லா செயற்கைக் கோள் சந்திரயான்-ஒன்றை வெற்றிகரமாக இந்தியா செலுத்தியுள்ள நிலையில், மனிதனுடன் கூடிய செயற்கைக் கோள் வரும் 2020ஆம் ஆண்டில் சந்திரனுக்கு அனுப்பப்படும் என்று சந்திரயான் திட்ட இயக்குனர் எம். அண்ணாதுரை கூறியிருக்கிறார்.

சேலத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், சந்திரயான் - ஒன்று வெற்றிகரமாக செலுத்தப்பட்டிருப்பதன் மூலம் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு ஆளுடன் கூடிய செயற்கைக்கோளை அனுப்பும் நம்பிக்கை உருவாகியிருப்பதாகக் கூறினார்.

அடுத்த 2 ஆண்டுகளில் சந்திரயான்-2 செலுத்தப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து சந்திரயான் -3 விண்ணிற்கு அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் மாதத்தில் அனுப்பப்பட்ட சந்திரயான் - ஒன்று அனுப்பியுள்ள தகவல்களை விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுவான சந்திரன் ஆராய்ச்சி மையத்தை அமைப்பது குறித்து இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் - இஸ்ரோவுடன் பல நாடுகள் தொடர்பு கொண்டிருப்பதாகவும் அண்ணாதுரை கூறினார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments