2009-10ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சகர் பொறுப்பை ஏற்றுள்ள பிரதமரின் சார்பாக அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து வருகிறார்.
இந்திய பொருளாதார வெற்றியின் நாயகனாக நமது நாட்டின் விவசாயிகள் திகழ்கின்றனர் என்று கூறி நிதிநிலை அறிக்கையை வாசிக்க துவங்கினார் பிரணாப் முகர்ஜி.
2008-09 நிதி ஆண்டில் இந்தியாவின் நிதி பற்றாக்குறை 2.7 விழுக்காடாக குறைந்துள்ளது.
இந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 முதல் 8 விழுக்காடாக இருக்கும்.
இந்த நிதியாண்டில் இந்தியாவின் அந்நிய முதலீட்டு வளர்ச்சி அதற்கு முந்தைய ஆண்டை விட 39 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இந்திய அரசின் வரி வருவாய் மொத்த உள்நாட்டு உற்பத்தில் 12.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
--------------
உலகலாவிய அளவில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவின் நமது நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்தநிலை பெரும் கடன் சிக்கலை உருவாக்கியுள்ளது.
இந்தியாவின் தொழிலக உற்பத்தி இதற்கு முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2 விழுக்காடு குறைந்துள்ளது.
நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையை போக்கிட மத்திய அரசு நிதி, நாணய, கடன் அளிப்பு தொடர்பான முக்கிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை உந்தும் சக்திகளாக விவசாயமும், உற்பத்தி துறையும் உள்ளன.
2008ஆம் ஆண்டில் மட்டும் பொது விநியோகத் திட்டடத்தின் கீழ் 22.7 மில்லியன் டன் கோதுமை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஆண்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 28.5 மில்லியன் டன் அரிசி விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
...............
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2008-09 நிதியாண்டு வரை விவசாயத்துறையில் செய்யப்பட்ட முதலீடு 300 விழுக்காடு அளவிற்கு உயர்ந்துள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு சேமிப்பு 37.7 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
இதற்கு முந்தைய நிதியாண்டில் மட்டும் இந்தியாவிற்கு வந்த அந்நிய நேரடி முதலீடு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 விழுக்காடு அளவிற்கு உயர்ந்துள்ளது.
இந்தநிதியாண்டில் மட்டும் 37 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவைகளின் மொத்த மதிப்பீடு ரூ.70,000 கோடி கள் ஆகும்.
உருக்கு உற்பத்தி வளர்ச்சி இந்தியாவை 2வது வேகமாக வளரும் பொருளாதாரமாக உயர்த்தியுள்ளது.
ஆயினும், உலக பொருளாதார பின்னடைவு காரணமாக இந்த நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் இந்தியாவின் ஏற்றுமதி 17.1 விழுக்காடாக குறைந்துள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 7.1 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதனால் உலக அளவில இந்தியா அதிக அளவு வளர்ச்சி பெறும் நாடுகளில் இரண்டாவது நாடாக உள்ளது.
அரசு-தனியார் கூட்டுறவுடன் 54 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களில் மொத்தம் ரூ.67 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும்.
................
ஊரக வளர்ச்சிக்கு அதிகபட்ச முன்னுரிமை.
இந்திரா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் இதுவரை 60.12 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன.
வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள் விரிவுப்படுத்தப்படும்.
விவசாயிகளின் கடன் சுமை ரூ.65,300 கோடிக்கு இந்த நிதியாண்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
விவசாயத்திற்கு அளிக்கப்படும் கடனிற்காக செய்யப்பட்ட ஒதுக்கீடு மும்மடங்காக உயர்த்தப்பட்டு 2 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நிதி சீர்திருத்தத்தின் வாயிலாக பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவோம்.
வரும் நிதியாண்டில் புதிதாக 15 மத்திய பல்கலைக்கழகங்களும், 6 இந்திய கல்விக்கழகங்களும் (ஐ.ஐ.டி) துவக்கப்படும்.
................
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியில், தனிநபர் வருவாய் 7.4% அதிகரித்துள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2004-05 ஆம் நிதி ஆண்டில் 7.5% ஆக இருந்தது. இது 2006-07 ஆம் நிதி ஆண்டில் 9.7% ஆக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிதி ஆண்டில் 9% ஆக இருக்கும்.
உள்நாட்டு சேமிப்பு 37.7% ஆக உள்ளது.
..................
வரும் நிதியாண்டில் ராஜஸ்தானிலும், மத்திய பிரதேசத்திலும் புதிதாக 2 இந்திய தொழில் நுட்ப கல்விக்கழகங்கள் நிறுவப்படும்.
இந்த நிதியாண்டில் செப்டம்பர் வரை கல்விக்கடன்களாக மாணவர்களுக்கு ரூபாய் 24,260 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய தொழிற்கல்வி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கையில் இளம் விதவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த நிதியாண்டில் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சி 84 விழுக்காடு அதிகரித்து ரூபாய் 10 லட்சத்து 81 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
..............
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் விவசாய துறைக்கான திட்ட முதலீடு முன்று மடங்கு (300% ) அதிகரித்துள்ளது.
விவசாயிகளுக்கு சலுகை வட்டியில் கடன் வழங்குவது தொடரும்.
இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரை அந்நிய நேரடி முதலீடு 23.3 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
.....................
மண்டல ஊரக வங்களின் நிதியிருப்பை அதிகரிக்க ரூ.652 கோடி அளிக்கப்பட்டுள்ளது
தேச முதலீட்டு நிதி தொகுப்பில் உள்ள 4இல் 3 பங்கு நிதி சமூக மேம்பாட்டு திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய சுங்கத்துறைக்கு முதன்முறையாக கண்காணிப்பு கப்பல்கள் 109 பெறுவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார பின்னடைவு காரணமாக இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலையை கருத்தில் கொண்டு வரி விகிதங்கள் கட்டாயம் குறைக்கப்படும்.
மக்களவை நடவடிக்கைகள் 10 நிமிடங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர் ஒருவர் திடீரென்று உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் அவை 10 நிமிடம் நேரம் தள்ளிவைக்கப்பட்டு, பிறகு மீண்டும் தொடர்ந்து நடந்து வருகிறது.
குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு 6,075 கோடி ஒதுக்கீடு.
குடிநீர் திட்டத்திற்கு 7,400 ஒதுக்கீடு.
ஜவஹர்லால் நேரு நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டத்திற்கு 11,842 கோடி ஒதுக்கீடு.
மத்திய திட்ட செலவு ரூ.2,43,386 கோடியில் இருந்து ரூ.7,50,884 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.14,000 கோடியில் (2008-09) இருந்து 44,863 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிபற்றாக்குறை 6% ஆக திருத்தப்பட்டுள்ளது.
பாரத் நிர்மான் திட்டத்திற்காக ரூ.4,900 கோடி (2009-10) ஒதுக்கப்பட்டுள்ளது.
வருவாய் பற்றாக்குறை ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4% ஆக திருத்தப்பட்டுள்ளது.
உத்தேச வரியில்லாத வருவாய் 96,203 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2008-09 நிதிநிலை அறிக்கையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதை விட 60,000 வரி வருவாய் குறைந்துள்ளது.
தனிநபர் ஆண்டு வருவாய் 7.4% ஆக அதிகரித்துள்ளது.