Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 பேர் பலி! பஞ்சாபில் டிரக் பள்ளத்தில் விழுந்தது!

Webdunia
வியாழன், 10 அக்டோபர் 2013 (12:22 IST)
FILE
பஞ்சாப் மாநிலம் கோசியார்பூர் மாவட்டத்தில் டிரக் பள்ளத்திற்குள் விழுந்ததில் 20 பக்தர்கள் பலியாகியுள்ளனர். 40 பேர் காயம் அடைந்துள்ளனர்.

கபூர்தலாவை சேர்ந்தவர்கள் டிரக் ஒன்றில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர்.

அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊருக்கு அவர்கள் திரும்பினர். அவர்களது டிரக் கோசியார்பூர் மாவட்டம் மாங்குவால் கிராமம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளம் ஒன்றில் கவிழ்ந்தது.

இதில் 13 பெண்கள், 4 சிறுவர்கள் உள்பட 20 பேர் பலியாகியுள்ளனர் என்று அம்மாவட்ட போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். டிரக்கில் அதிகமான பாரம் ஏற்றியதே கவிழ்வதற்கு காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments