கேரளாவில் குளிக்கும்போது பானைக்குள் மாட்டிக்கொண்ட 2 வயது குழந்தையை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
கேரளா மாநிலம் ஆலப்புழாவை அடுத்த ஆலுவாவைச் சேர்ந்த சந்தோஷ், திவ்யா ஆகியோரின் குழந்தை நிரஞ்சனா(2). குழந்தைகள் பெரும்பாலும் தொட்டியில் குளிப்பதை விரும்புவார்கள்.
அதே போல் நிரஞ்சனாவை அவரது தாயார் குளிக்க வைக்க வீட்டிற்கு பின்புறம் அழைத்துச் சென்று அமர வைத்துவிட்டு, சமையல் அறைக்கு சென்று வந்துள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை குளிக்க வைத்திருந்த தண்ணீர் பானைக்குள் உட்கார்ந்துள்ளது.
பானை சிறிய அளவு என்பதால் குழந்தை பானைக்குள் மாட்டிக்கொண்டது. குழந்தை அலறி துடித்துள்ளது. குழந்தையின் பெற்றோர்கள் குழந்தையை பானையில் இருந்து எடுக்க முடியாமல் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின்பேரில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் பானையை கட்டர் மூலம் ஒரு பக்கமாக அறுத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.