Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயிலின் முன் செல்பி - பரிதாபமாக உயிரிழந்த 2 சிறுவர்கள்

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (08:57 IST)
பஞ்சாபில் ரயிலின் முன் செல்பி எடுக்க முயன்ற இரு சிறுவர்கள் பரிதாபமாக பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகமெங்கும் வயது வித்தியாசம் இன்றி இன்று பரவியுள்ள ஒரு வியாதி செல்பி. எதை பார்த்தாலும், யாரை பார்த்தாலும் உடனே மொபைலை எடுத்து செல்பிஎடுப்பது இப்போது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. மேலும் செல்பி எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளது.
 
ரயில்வே ஸ்டேஷனில் செல்பி எடுத்தால் 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் நடைமுறை அமுலுக்கு வந்தும் பலர் திருந்திய பாடில்லை.
 
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகர் - லூதியானா கத்னா சாஹிப் ரெயில்வே பாலத்தில் நின்று கொண்டிருந்த 7ஆம் வகுப்பு படிக்கும் 3 சிறுவர்கள், அந்த வழியாக வந்த ரயில் முன் செல்பி எடுக்க முயற்சித்தனர்.
 
அப்போது ஏற்பட்ட விபத்தில் யுவராஜ், கவுரவ் என்ற இரு சிறுவர்கள் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் CHATGPT, DeepSeek ஏஐ பயன்படுத்த கூடாது: மத்திய நிதி அமைச்சகம் தடை

தொங்கு சட்டசபை ஏற்பட்டால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு..!

கடன் வாங்கியது ரூ.6000 கோடி.. வங்கிகள் வசூலித்தது ரூ.14000 கோடி.. விஜய் மல்லையா வழக்கு..!

18 ஊழியர்களை திடீரென நீக்கிய திருப்பதி தேவஸ்தானம்.. என்ன காரணம்?

டெல்லியில் நடைபெறும் திமுக ஆர்ப்பாட்டம்.. ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments