Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயிலின் முன் செல்பி - பரிதாபமாக உயிரிழந்த 2 சிறுவர்கள்

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (08:57 IST)
பஞ்சாபில் ரயிலின் முன் செல்பி எடுக்க முயன்ற இரு சிறுவர்கள் பரிதாபமாக பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகமெங்கும் வயது வித்தியாசம் இன்றி இன்று பரவியுள்ள ஒரு வியாதி செல்பி. எதை பார்த்தாலும், யாரை பார்த்தாலும் உடனே மொபைலை எடுத்து செல்பிஎடுப்பது இப்போது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. மேலும் செல்பி எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளது.
 
ரயில்வே ஸ்டேஷனில் செல்பி எடுத்தால் 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் நடைமுறை அமுலுக்கு வந்தும் பலர் திருந்திய பாடில்லை.
 
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகர் - லூதியானா கத்னா சாஹிப் ரெயில்வே பாலத்தில் நின்று கொண்டிருந்த 7ஆம் வகுப்பு படிக்கும் 3 சிறுவர்கள், அந்த வழியாக வந்த ரயில் முன் செல்பி எடுக்க முயற்சித்தனர்.
 
அப்போது ஏற்பட்ட விபத்தில் யுவராஜ், கவுரவ் என்ற இரு சிறுவர்கள் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments