Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ஜி வழக்கு சாட்சிகளை பழனிமாணிக்கம் மிரட்டுகிறார்: சுப்பிரமணியசாமி

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2012 (11:33 IST)
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு சாட்சிகளை மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கம் மிரட்டுவதாக சுப்பிரமணியசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு புகார் கடிதம் ஒன்றை சுப்பிரமணியசாமி அனுப்பியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் திமுக மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கத்தின் தலையீடு இருப்பதாக எனக்கு தகவல் வந்துள்ளது.

பழனிமாணிக்கத்தின் கட்டுப்பாட்டில் மத்திய வருவாய், வருமான வரித்துறை கலால், சுங்கம் ஆகிய துறைகள் உள்ளன. இதில் உள்ள அதிகாரிகளை வைத்துக்கொண்டு பழனிமாணிக்கம் 2ஜி வழக்கு சாட்சிகளை மிரட்டுவதாக தகவல் வருகின்றது.

பழனிமாணிக்கத்தின் தலையீடு மூலம் 2ஜி வழக்கின் போக்கை மாற்ற முயல்வதாக தெரிகிறது. எனவே அவரை நிதித்துறை அல்லாத வேறு துறைக்கு மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments