Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2ஜி வழக்கு சாட்சிகளை பழனிமாணிக்கம் மிரட்டுகிறார்: சுப்பிரமணியசாமி

2ஜி வழக்கு சாட்சிகளை பழனிமாணிக்கம் மிரட்டுகிறார்: சுப்பிரமணியசாமி
, புதன், 22 பிப்ரவரி 2012 (11:33 IST)
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு சாட்சிகளை மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கம் மிரட்டுவதாக சுப்பிரமணியசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு புகார் கடிதம் ஒன்றை சுப்பிரமணியசாமி அனுப்பியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் திமுக மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கத்தின் தலையீடு இருப்பதாக எனக்கு தகவல் வந்துள்ளது.

பழனிமாணிக்கத்தின் கட்டுப்பாட்டில் மத்திய வருவாய், வருமான வரித்துறை கலால், சுங்கம் ஆகிய துறைகள் உள்ளன. இதில் உள்ள அதிகாரிகளை வைத்துக்கொண்டு பழனிமாணிக்கம் 2ஜி வழக்கு சாட்சிகளை மிரட்டுவதாக தகவல் வருகின்றது.

பழனிமாணிக்கத்தின் தலையீடு மூலம் 2ஜி வழக்கின் போக்கை மாற்ற முயல்வதாக தெரிகிறது. எனவே அவரை நிதித்துறை அல்லாத வேறு துறைக்கு மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil