Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ஜி தீர்ப்பு நிம்மதி அளிக்கிறது: பிரணாப்

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2012 (18:38 IST)
2 ஜி ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சேர்க்கக் கோரி சுப்ரமணிய சுவாமி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது நிம்மதி அளிக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைக் கூறிய அவர், யாரோ சிலர் தேவையில்லாமல் குற்றம்சாட்டப்பட்டிருப்பார்கள் என்பதால் இந்த தீர்ப்பு நிம்மதி அளிப்பதாக தெரிவித்தார்.

மேலும் 2ஜி தொடர்பான பிரதான வழக்கிலேயே, நிதியமைச்சகத்தின் அறிவுரை கவனத்தில் கொள்ளப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாக பிரணாப் குறிப்பிட்டார்.

இதேப்போன்று மத்திய தொலை தொடர்புதுறை அமைச்சர் கபில் சிபல் குறிப்பிடுகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ப.சிதம்பரத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டதாகவும், நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆச்சரியம் அளிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் எங்கள் மீது எதிர்கட்சித் தலைவர்கள் சிலர் தொடர்ந்து குறைகூறி சாடி வருவது ஏமாற்றத்தை அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments