Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ஜி ஊழல்: 63 பேர் விசாரணையில் உள்ளனர் – ம.பு.க.

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2011 (14:51 IST)
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக 10 தொலைத் தொடர்பு நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர்கள் உட்பட 63 பேர் தங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக புலனாய்வு செய்துவரும் தங்கள் அமைப்பு, இதுவரை மேற்கொண்டுள்ள விசாரணை தொடர்பான விவர அறிக்கையை இவ்வழக்கை விசாரித்துவரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்கூலி ஆகியோர் கொண்ட அமர்விடம் மத்திய புலனாய்வுக் கழகத்தின் வழக்குரைஞர் இன்று தாக்கல் செய்தார்.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு குறித்து விசாரிக்க தனி நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கூறிய மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங், அது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், அதனை அவர் பரிசீலித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments