Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2ஜி ஊழல்: இரண்டாவது குற்றப்பத்திரிகை 25ல் தாக்கல்

2ஜி ஊழல்: இரண்டாவது குற்றப்பத்திரிகை 25ல் தாக்கல்
புதுடெல்லி , ஞாயிறு, 17 ஏப்ரல் 2011 (13:12 IST)
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில்,சிபிஐ தனது இரண்டாவது குற்றப்பத்திரிகையை வருகிற 25 ஆம் தேதியன்று தாக்கல் செய்ய உள்ளது.

ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மும்பை தொழில் அதிபர் ஷாகீத் பல்வா மற்றும் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் சிபிஐ.அதிகாரிகள் ஏற்கனவே ஒரு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். இப்போது இரண்டாவதாக இன்னொரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர்.

வருகிற 25 ம் தேதியன்று இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. அதில் ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் பரிமாற்றம் தொடர்பான தகவல்கள் இடம் பெற உள்ளது.

இரண்டாவது குற்றப்பத்திரிகையில் மேலும் பல தொழில் அதிபர்கள், பிரமுகர்களின் பெயர்கள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil