Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 193 பேர் கொரோனாவால் மரணம்: அதிர்ச்சி தகவல்

Webdunia
திங்கள், 13 ஜூலை 2020 (20:33 IST)
மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 193 பேர் கொரோனாவால் மரணம்
இந்தியாவிலேயே அதிக பாதிப்பு உடைய மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 193 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மேலும் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மேலும் 6,497 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6,497 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,60,924 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இன்று ஒரே நாளில் 193 பேர் கொரோனாவால் இறந்துள்ளதால், அம்மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 10,482 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று 4182 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதும் இதனையடுத்து 144,507 பேர் மொத்தம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் மகாராஷ்டிராவில் 687,792 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 41,660 பேர்கள் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments